×

தா.பழூர் அருகே சாலை பள்ளங்களை சீர் செய்யும் பணி

தா.பழூர் ஏப்.1: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர் வழியாக கும்பகோணம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில், மழைநீர் தேங்கிய இருந்த காரணத்தால் ஆங்காங்கே பள்ளமாகி போக்குவரத்துக்கு சிரமமாக இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது மழை சற்று குறைந்துள்ள நிலையில், சாலையில் உள்ள பள்ளங்களை சாலை பணியாளர்களை கொண்டு சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அரியலூர் கோட்ட பொறியாளர் அறிவுறுத்தலின் படி, ஜெயங்கொண்டம் உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் சாலை ஆய்வாளர் தலைமையில், சாலை பணியாளர்களை கொண்டு தார் சாலையில் உள்ள பள்ளங்களை சீர் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணி சிலால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கி தா.பழூர் பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது.

 

Tags : Tha.Pazhur. ,Tha.Pazhur ,Jayankondam ,Ariyalur district ,Kumbakonam ,
× RELATED பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை...