×

பாளை.யில் இன்று செயல்வீரர்களுடன் கனிமொழி கலந்தாய்வு

நெல்லை, ஏப். 1: மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளருமான அப்துல் வஹாப் எம்எல்ஏவை ஆதரித்து, பாளை. சட்டமன்றத் தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் பாளையில் இன்று மாலை நடக்கிறது. இதில் கனிமொழி எம்பி பங்கேற்கிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடக்கிறது. பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நெல்லை மத்திய மாவட்ட திமுக ெபாறுப்பாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ திமுக வேட்பாளராக 2ம் முறையாக போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏவை ஆதரித்து பாளை. சட்டமன்றத் தொகுதி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் பாளை. வஉசி மைதானம் அருகேயுள்ள பிபிஎல் திருமண மண்டபத்தில் இன்று (1ம் தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி எம்பி பங்கேற்று பேசுகிறார். இக் கூட்டத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி, மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து கட்சிகளின் செயல்வீரர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே போல நெல்லை சட்டமன்றத் தொகுதி மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ தலைமையில் நாளை (2ம் தேதி) காலை 9 மணிக்கு பேட்டை சாலை கோடீஸ்வரன்நகர் ராஜா மஹாலில் நடக்கிறது. எனவே இக்கூட்டத்தில் மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Kanimozhi ,Palai ,Nellai ,Secular Progressive Alliance ,Palaiyankottai Assembly Constituency DMK ,Nellai Central District ,Abdul Wahab ,MLA ,Assembly Constituency DMK ,Palai… ,
× RELATED பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை...