நாகர்கோவில், ஏப்.1: காவல் துறையில் பணி புரிந்து நேற்று ஓய்வு பெற்ற 6 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று முன்தினம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஸ்டாலின் கலந்துரையாடினார். பின்னர் பணியில் சிறப்பாக செயல்பட்டு தங்களது பணியை நிறைவு செய்த அனைவரையும் பாராட்டி சான்றிதழ் மற்றும் வாழ்த்து மடல்களை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் வழங்கி காவல் பணியில் தங்கள் ஈடுபாடும் ஒழுக்கமும் எதிர்கால அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக திகழும் என்றார்.
