5 மாநிலங்களில் ரூ.408 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மார்ச் 15 அன்று சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் பிப்.26 அன்று முதலே மின்னணு பறிமுதல் மேலாண்மை அமைப்பு 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் அமைத்தது.

இந்த 5 மாநிலங்களில் வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த பரிசுப்பொருட்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த பணம், நகைகள், மதுபானங்கள், போதை பொருட்கள் என ரூ.408 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோதப் பொருட்கள் கடந்த ஒரு மாதத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதில், ரூ.17.44 கோடி ரொக்கம், ரூ.37.68 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் (16.3 லட்சம் லிட்டர்), ரூ.167.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.163.30 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பிற இலவசப் பொருட்கள் அடங்கும்.

Related Stories: