திருவாரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் ராஜா. நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்தவர். இவர், மன்னார்குடி தொகுதியில் சீட் கேட்டு விருப்ப மனு அளித்துள்ளார். நேர்காணலிலும் கலந்து கொண்டார். இவருக்கு தான் சீட் கிடைக்கும் என்று தவெகவினர் நினைத்திருந்தனர். இந்நிலையில், திருத்துறைப்பூண்டி தொகுதியை பூர்வீகமாக கொண்ட ஒரு தொழிலதிபருக்கு மன்னார்குடியில் சீட் வழங்க தலைமை முடிவு செய்துள்ளதாம்.
இதை கேள்விப்பட்டு, மேற்கு மாவட்ட தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் குமுறலில் உள்ளனர். இதுபற்றி தவெகவினர் கூறுகையில், ‘‘ராஜாவுக்கு தான் மன்னார்குடி தொகுதியில் சீட் கிடைக்கும் என நினைத்திருந்தோம். ஆனால் இப்போது சுதன் (எ) செல்வ கணபதிக்கு தான் சீட் என கூறுகின்றனர். இவர் சிங்கப்பூரில் ‘யுனிவர்சல்’ என்ற செல்போன் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். பெரும் தொழிலதிபர். பக்கத்து தொகுதியான திருத்துறைப்பூண்டியை பூர்வீகமாக கொண்டவர். ஆனால், இப்போது சுதனின் குடும்பம் சிங்கப்பூரில் தான் வசிக்கிறது.
தொழிலதிபர் சுதன், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய நண்பர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் தவெகவில் சேர்ந்தார். ஆதவ்அர்ஜுனாவை தொடர்பு கொண்டு ெசன்னையில் ஏதேனும் ஒரு தொகுதி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், ஆதவ் அர்ஜுனா அவரை மன்னார்குடியில் நிற்க ஏற்பாடு செய்துள்ளாராம். இதற்காக ஆதவ் அர்ஜுனாவுக்கு, தொழிலதிபர் சுதன் ரூ.2 கோடி கொடுத்துள்ளாராம்’’ என்று வேதனையுடன் கூறினர்.
