தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருபுவனத்தில் 2 மின்கம்பங்களில் மோதி அரசு பேருந்து விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
