பனிக்காலம் முடிந்தும் தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்து

ஊட்டி : பனிக்காலம் நிறைவடைந்த போதிலும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் காணப்படும் அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் வண்ண வண்ண மலர்கள், வானுயர்ந்த மரங்கள், ஆசியாவிலேயே பெரிய புல்வெளி மைதானம், வானுயர்ந்த மரங்கள் உள்ளிட்ட இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருன்றனர்.

இந்த நிலையில் பூங்காவில் உள்ள பல வெளி நாடுகளில் காணப்படும் மரங்கள், மலர் செடிகள் இங்கு வளர்க்கப்படுகிறது. இவைகள் அந்தந்த பருவங்களில் மட்டும் பூக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இத்தாலியன் பூங்கா மற்றும் கண்ணாடி மாளிகை அருகில் பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா மலர் செடிகள் உள்ளன.

இந்த செடிகளில், பனிக்காலத்தில் மட்டுமே மலர்கள் பூத்து காணப்படும். வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு இரு வண்ணத்திலும், வெள்ளை, இளஞ்சிவப்பு நிறத்தில் அஜிலியா மலர்கள் பூக்கும். இவைகள் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனி பெய்யும் சமயங்களில் அதிகமாக காணப்படும். அதன்பின், இந்த செடிகளில் மலர்கள் அதிகமாக இருக்காது.

ஆனால் இம்முறை தற்போது வரை இந்த செடிகளை மலர்கள் பூத்து காணப்படுகிறது. முதல் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. அதே சமயம் இத்தாலியன் பூங்கா அருகே பூத்துக் குலுங்கும் அஜிலியா மலர்களை சுற்றுலா பயணிகள் வெகுவாக கவர்ந்து வருகிறது. இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: