இத்தாலியன் பூங்கா குளங்களில் பூத்து குலுங்கும் அல்லி மலர்கள்

*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி : இத்தாலியன் பூங்கா குளங்களில் உள்ள அல்லிச் செடிகளில் பூத்துள்ள மஞ்சள் நிற மலர்கள் சுற்றுலா பயணிகள் கவர்ந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக பூங்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில், பல வண்ண மலர்கள் பூத்துக் காணப்படும். அதேபோல், பல ஆயிரம் தொட்டிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்து காணப்படும்.

கோடை சீசனுக்காக தற்போது பூங்கா தயார் செய்யும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. இதனால் பூங்காவில் தற்போது மலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள் மட்டுமே சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ல வேண்டியுள்ளது.

அதேசமயம் தற்போது இத்தாலியின் பூங்கா குளங்களில் படர்ந்துள்ள அல்லிச் செடிகள் இன்னும் அகற்றப்படாத நிலையில், தற்போது அந்த செடிகளில் மஞ்சள் நிறத்தில் மலர்கள் காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: