குளித்தலை ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

 

குளித்தலை ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் தாமதமாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், பணிக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டி.எஸ்.பி. உறுதியளிக்க, போராட்டம் கைவிடப்பட்டது.

 

Related Stories: