×

கொள்கையா அதெல்லாம் எதுக்குங்க..? விசித்திரமாக ஓட்டு கேட்கும் விஜய் விசிறிகள்

சட்டப்பேரவை தேர்தல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து நிற்குமா? என்டிஏ கூட்டணியில் இணையுமா? என்று நாலாபுறமும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் எப்போது வெளியிடுவார்? 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார்? என்று ஒரு கூட்டம் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் கட்சி கொள்கை பரப்பு பொதுச்செயலாளரான முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நான் தான் வேட்பாளர் என்று கூறி, தீவிர வாக்கு ேசகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் தொகுதி முழுவதும் விநியோகிப்பதற்கு வாங்கி வைத்திருந்த பரிசுப்ெபாருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இதேரீதியில் சேலம் மத்திய மாவட்ட செயலாளரான தமிழன்பார்த்திபனும், தெற்கு தொகுதியில் நான்தான் வேட்பாளர் என்று கூறிக்கொண்டு வலம் வருகிறார். இவர் அடிப்ெபாடிகளை தொகுதி முழுவதும் அனுப்பி நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார். இப்படி வருபவர்களிடம் ‘மூத்த அரசியல்வாதிகள் சிலர், தம்பி உங்க கொள்கை என்ன? என்று ேகள்வி எழுப்புகின்றனர். அவர்களிடம் நோட்டீசை காட்டி ‘விஜய் தாய்மாமன் சீர் கொடுப்பாரு. தொகுதியில் யாராவது இறந்தால் ரூ.5ஆயிரம் கொடுப்பாரு.

குழந்தை பிறந்தால் தங்கமோதிரம் கொடுப்பாரு. டாக்டருங்கள வீட்டுக்ேக வந்து ஹெல்த்ெசக்அப் பண்ணச்சொல்லுவாரு’ என்று படித்துக் காட்டுகின்றனர். தம்பி இதெல்லாம் திட்டம். உங்க தலைவரின் கொள்ைக என்ன? என்று சொல்லுங்கன்னு கிடுக்கிப்பிடி போடுறாங்க. அவர்களிடம் அதெல்லாம் நமக்கு முக்கியம் இல்லீங்க. அப்புறமா கட்சியின் பெரிய ஆட்களிடம் கேட்டு சொல்றோம்’’ என்று கூறி எஸ்கேப் ஆகிறாங்களாம். இதை பார்ப்பவர்கள், இது என்ன மாதிரியான ஓட்டு சேகரிப்புன்னே தெரியலையே என்று வாய்விட்டு சிரிக்கிறாங்களாம்…

Tags : Vijay ,Tamil Nadu Victory Party ,NDA ,
× RELATED பெண்கள் குறித்து இழிவான பேச்சு; அதிமுக...