×

வேட்பு மனு தாக்கலுக்கு மொத்தமே 20 மணி நேரம் தான்…!

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 30ம் தேதி திங்கள் கிழமை தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 8 நாட்கள் கால அவகாசம் இருக்கும் வகையில் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. எனினும் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு 5 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அதாவது வருகிற 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் அன்று வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அதற்கு மறுநாள் 31ம் ேததி மகாவீர் ஜெயந்தி விடுமுறை நாளாகும். எனவே, அன்று அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது.

அதன் பின்னர் ஏப். 1, 2 ஆகிய இரண்டு நாட்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஏப்.3ம் ேததி புனித ெவள்ளி அரசு விடுமுறை நாளாகும். எனவே அன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அதற்கு அடுத்து ஏப்.4ம் தேதி முதல் சனிக்கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஏப்.5ம் ேததி ஞாயிறு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை நாளாகும். எனவே, அன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இதைத் தொடர்ந்து ஏப்.6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஒவ்வொரு நாளும் வேட்பு மனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு நிறைவடையும். அதாவது ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் நடைபெறும். அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக 20 மணி நேரம் மட்டுமே வேட்புமனு தாக்கல் நடைபெறும். எனவே வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளன்று இந்த முறை கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Tamil Nadu assembly ,Election Commission ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...