×

தேர்தல் நடத்தை விதிமுறை மீறி உர மூட்டைகளில் மோடி படம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் கடந்த 15ம்தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. இந்த விதிகளின் படி அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுதளங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகிறது. நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசு உரமானிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உர மூட்டைகளில் பிரதமர் மோடியின் படம் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் இந்த மூட்டைகளில் உள்ள பிரதமரின் படங்களை அழித்துதான் விற்பனை செய்ய வேண்டும்.

தற்போது ஒவ்வொரு உரக்கிடங்கிலும் 500 மூட்டை, 1,000 மூட்டை உரங்கள் உள்ள நிலையில் தனியாக ஒரு ஆள் வைத்து ஒவ்வொரு மூட்டையில் உள்ள பிரதமரின் படத்தை அகற்றிதான் விற்பனை செய்ய வேண்டும். இதற்கு கூடுதலாக நாட்கள் தேவை மற்றும் ஆட்களுக்கு கூலி தேவைப்படும். யூரியா ஒரு மூட்டை 766, டிஏபி 1350, காம்ப்ளக்ஸ் 1450 என விற்பனை செய்யும் இடத்தில் ஒவ்வொரு மூட்டையில் உள்ள படத்தை அழிப்பதற்கு கூடுதல் செலவாகும். இறக்குமதி செய்ய மூட்டைகளில் உள்ள மோடி படத்தை நாங்கள்தான் அழித்து விவசாயிகளிடம் விற்பனை செய்ய வேண்டும் நிலை உள்ளது என விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.

Tags : Modi ,Tamil Nadu Assembly ,
× RELATED பெண்கள் குறித்து இழிவான பேச்சு; அதிமுக...