பீகார் அரசியலில் பரபரப்பு நிதிஷ் கட்சியிலிருந்து கே.சி.தியாகி விலகல்: மார்ச் 22ல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

புதுடெல்லி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நண்பரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான கே.சி. தியாகி அந்த கட்சியில் இருந்து விலகி விட்டார். பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலக உள்ளார். அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு விட்டார். இந்த நிலையில் நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் 2003ல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை நிதிஷ்குமாருக்கு உறுதுணையாக இருந்து வந்த மூத்த தலைவர் கே.சி.தியாகி அந்த கட்சியில் இருந்து விலகி விட்டார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைமைப் பொதுச் செயலாளர், தலைமைப் பேச்சாளர் மற்றும் அரசியல் ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து அவர், நிதிஷ்குமாரின் நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்தார்.

இதுபற்றி கேட்ட போது,’ஆம், நான் கட்சியிலிருந்து விலகிவிட்டேன். கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் நிறைவடைந்துவிட்டது. இம்முறை நான் எனது கட்சி உறுப்பினர் பதவியை புதுப்பிக்கவில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக எனது தோழராகத் திகழ்ந்த நிதிஷ் குமார் மீது நான் கொண்டுள்ள தனிப்பட்ட மரியாதை, இப்போதும் மாறாமல் அப்படியே உள்ளது. எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும். எனது அரசியல் நண்பர்கள், ஆதரவாளர்களுடன் இணைந்து, நாட்டின் அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக, மார்ச் 22 ஆலோசனை நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: