மாநகர பேருந்தில் பயணியிடம் 79 கிராம் தங்க நகை திருடிய பெண் கைது

ஆலந்தூர்: மாநகர பேருந்தில் பயணியிடம் 79 கிராம் தங்க நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருச்சியை சேர்ந்தவர் லதா (58). இவர், மடிப்பாக்கத்தில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக திருச்சியிலிருந்து பேருந்து மூலம் கிளாம்பாக்கம் வந்துள்ளார். அங்கிருந்து, மாநகர பேருந்தில் மடிப்பாக்கம் வந்துள்ளார். பின்னர் மகளின் வீட்டிற்கு சென்றதும், தனது பையை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 79 கிராம் தங்க நகைகள், பணம் போன்றவை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், மாநகர பேருந்தில் லதா பயணித்தபோது, நகை, பணம் திருடு போனது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் நகை, பணம் திருட்டில் ஈடுபட்டது கிழக்கு தாம்பரம், கணபதி காலனியை சேர்ந்த பழைய குற்றவாளி மகேஷ்வரி (38) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, 6 சவரன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: