பெரம்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் இருந்து 450 கிராம் தங்கம், பணம் அதிரடி பறிமுதல்

பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் இருந்து 450 கிராம் தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு குழுவினர் நேற்று சோதனை செய்தனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இறந்து இறங்கிச் சென்ற வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்தியபோது ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மற்றும் 68 லட்ச ரூபாய் மதிப்பிலான 450 கிராம் தங்க பிஸ்கட், தங்க நகைகள் வைத்திருந்தார். இந்த பணம், தங்கம் தொடர்பான ஆவணங்கள் அவரிடம் இல்லாத காரணத்தினால் அவற்றை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி நடதப்பட்ட விசாரணையில் பணம், தங்கம் கொண்டுவந்தவர் வசந்தகுமார் (36) என்பது தெரியவந்தது.

Related Stories: