உதவித்தொகை உயர்த்தி வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம்

 

திருச்சி, மார்ச் 14: மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்தி வழங்ககோரி திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில், வருவாய்த்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும், மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையை ரூ. 3 ஆயிரமும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6 ஆயிரமும் என உயர்த்தி வழங்க வேண்டும்

Related Stories: