திருச்சி, மார்ச் 14: திருச்சி ஏர்போர்ட்டில் சகோதரி வீட்டில் தங்கியிருந்த வாலிபர் மாயமானார். போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மனகிரி நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவருக்கு ராஜு (26) என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். ராஜு டிப்ளமோ மின் மற்றும் தொடர்பியல் துறையில் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
