திருச்சி, மார்ச் 11: திருச்சி, அண்ணாநகர் பகுதியில் சிட்டி கிளப் மையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு குழு அலுவலகம் எண்.5, வார்டு எண்.28 அண்ணாநகர், உழவர் சந்தை நீர் தேக்கத்தொட்டி வளாகப் பகுதியில் மாநில நிதிக்குழு ஊக்கநிதி மற்றும் மாநகராட்சியின் பொதுநிதித் திட்டத்தின் கீழ் ரூ. 5.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி மையம், உள் மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகளுக்கான (சிட்டிகிளப்) மையத்தை நேற்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்தவர்களுக்கு அதற்கான ஆணையை வழங்கி உரையாற்றினார்.
