திருச்சி, மார்ச் 4: திருச்சி எடமலைபட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் கடந்த நவ.17ம்தேதி தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது ஒருவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அப்பெண்ணையும் அவரது மகளையும் தாக்கி, வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிந்து மதுரை மெயின் ரோடு வள்ளுவர் நகரைச் சேர்ந்த விஜயகுமார்(36), என்பவரை கைது செய்தனர்.
