புதுடெல்லி: பாமக கட்சியில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கிடையே உள்கட்சி பிரச்சனை இருந்து வருகிறது இந்த நிலையில், போலி ஆவணம் கொடுத்து பா.ம.க கட்சியை அபகரித்ததாக அன்புமணி ராமதாசுக்கு எதிராக ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். முன்னதாக வழக்கை விசாரித்த நீதிமன்றம்,”அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது. குறிப்பாக கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது.
மேலும் அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரரரின் கருத்தை பெற்று தேர்தல் ஆணையம் முடிவெடுக்க கூடாது. அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது. குறிப்பாக பாமக கட்சியில் இதே நிலை நீடித்தால் சின்னத்தை முடக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம். இருப்பினும் கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி உங்களது கோரிக்கையை வைக்கலாம் என்று உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம்,”பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை கடந்த டிசம்பர் மாதம் முடித்து வைத்திருந்தது.
இதைத்தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது அதில், பாமக கட்சி மற்றும் மாம்பழ சின்னம் ஆகியவை தொடர்பாக பொய்யான தகவல்களையும் போலியான ஆவணங்களையும் தாக்கல் செய்து அன்புமணி பெற்றுள்ளார் எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் ராமதாஸ் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திரந்தது.
இந்த சூழ்நிலையில் மாம்பழ சின்னம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட அவசர முறையீட்டை வரும் திங்கட்கிழமை அன்று உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொள்கிறது. இது போன்ற சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த மனுவானது அவசர வழக்காக வரும் வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
