சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எல்.கே.சுதீஷ் நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனுக்கு வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அவருக்கு செல்வப்பெருந்தகை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேட்டியளிக்கையில், ‘‘இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக இருந்தபோது வெளியுறவு கொள்கை வலிமையுடன் இருந்தது. அண்டை நாடுகள் எல்லாம் நட்பு நாடாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அண்டை நாடுகள் எல்லாம் பகை நாடுகளாக மாறிவிட்டனர். இந்தியாவின் எல்லா உரிமைகளையும் பிரதமர் மோடி விட்டு கொடுத்து விட்டார்’’ என்றார்.
செல்வப்பெருந்தகையிடம் வாழ்த்துப்பெற்ற எல்.கே.சுதிஷ்
- செல்வப்பபெருந்தகை
- எல். கே. சுடிஷ்
- சென்னை
- சபா
- தெமுத்திகா
- திமுகா கூட்டணி
- எல். கே. சுதீஷ்
- சத்தியமூர்த்தி பவன்
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
