×

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி உடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு!!

டெல்லி: ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி உடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய 14 நாட்களுக்குள் 4வது முறையாக அப்பாஸ் உடன் ஜெய்சங்கர் பேசியுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு முழு உரிமையும் உள்ளது. வளைகுடா போரால் சர்வதேச மற்றும் வட்டார அளவில் ஏற்பட்ட சூழல் குறித்தும் அப்பாஸ் அரக்ஸி விவரித்தார்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர், இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் இருந்து ஆசியா உள்பட உலகின் பிற பகுதிகளுக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்வது தடைபட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விநியோகம் தடையால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளுக்கு தடுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேவேளை, ஹார்மூஸ் ஜலசந்தியில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரான் அனுமதி அளிக்கும்பட்சத்தில் கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியாவுக்கான பயணத்தை தொடர முடியும். இந்த பேச்சுவார்த்தையின் போது அரபிக்கடலில் ஈரான் அருகே நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு வரவேண்டிய கச்சா எண்ணெய் கப்பல்களை ஹார்மூன் ஜலசந்தி வழியாக எந்தவித சிக்கலும் இன்றி செல்ல அனுமதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Tags : Jaishankar ,Foreign Minister ,Abbas Araqchi ,Delhi ,Indian External Affairs Minister ,S Jaishankar ,Abbas ,US ,Israel ,Iran ,Israel… ,
× RELATED 2029ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு...