நாடு முழுவதும் அனைத்து எரிபொருள் நிலையங்களும் வழக்கம் போல் இயங்கும் : இந்தியன் ஆயில் நிறுவனம்

டெல்லி : இந்தியன் ஆயில் நிறுவனத்தால் நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து எரிபொருள் நிலையங்களும் தொடர்ந்து திறந்திருக்கும், வழக்கம்போல் செயல்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், “பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. மேலும், விநியோக நடவடிக்கைகள் நாடு முழுவதும் சீராக நடைபெற்று வருகின்றன.வாடிக்கையாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: