போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை இளைஞருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

மதுரை: 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞருக்கு போக்சோ வழக்கில் 2023ம் ஆண்டு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீடு நிலுவையில் இருந்த காலத்தில் 2024ம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அந்த இளைஞருக்கும் திருமணம் நடந்தது.

தான் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதால் கீழமை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய மேஜர் ஆன அப்பெண் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இருவரும் இணைந்து வாழும் போது, தண்டனையை நீட்டிப்பது இரு தரப்புக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் எனக்கூறி, ஆயுள் தண்டனையை நீதிபதிகள் ரத்து செய்தனர். அப்பெண்ணுக்கு அரசு வழங்கிய ரூ.4 லட்சம் இழப்பீட்டை 12 வாரங்களுக்குள் திரும்பச் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: