மடிப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் ஸ்ட்ரெச்சரில் படுத்தப்படி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவன்

ஆலந்தூர்: சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் சாய்கார்த்திக் (16). இவர் மடிப்பாக்கம் பகுதியில் உள்ளபிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். தற்போது பொதுத்தேர்வு நடந்துவரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் மாடியில் தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்தபோது படிக்கட்டில் இருந்து தவறிவிழுந்து அவரது முதுகு தண்டுவடம் உடைந்தது. இதையடுத்து, கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், ஸ்டெச்சரில் படுத்தப்படியே தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் என்று மாணவனின் தந்தை பள்ளிக்கல்வித்துறையை நாடினார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்ததையடுத்து பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவர் டாக்டர் வாசுதேவனின் சிறப்பு ஏற்பாடுகள் செய்து மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் வந்த மாணவர் பின்னர் ஸ்ட்ரெச்சரில் படுத்தப்படியே பள்ளியில் உள்ள தேர்வு அறைக்கு வந்தார். பின்னர் அவரிடம் கொடுக்கப்பட்ட வினாவின் பதிலை மாணவன் ஒப்புவிக்க அதை சிறப்பு ஆசிரியர் பரீட்சை பேப்பரில் எழுதி முடித்தார். இந்த சம்பவம் சக மாணவர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: