தமிழ்நாட்டுக்கு டிஜிபி நியமனம் எப்போது ?-20ம் தேதி ஆலோசனை

டெல்லி : தமிழ்நாட்டில் டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. தகுதியுள்ள அதிகாரிகள் பட்டியல் UPSC-க்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும் பட்டியலை ஆய்வு செய்ய வரும் 20ம் தேதி தேர்வுக்குழு கூட்டம் நடக்க இருப்பதாக UPSC தெரிவித்தது. இந்த விளக்கங்களை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: