திண்டுக்கல்:கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடைகளில் டீ, காஃபி, வடை, பஜ்ஜி உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. திண்டுக்கலில் ரூ.8-க்கு விற்கப்பட்ட வடை, பஜ்ஜி, போண்டா விலை ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பில் உள்ளது. சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் 2 நாட்களுக்கு பிறகு தேநீர் கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
