×

இந்திய வேளாண் பொருட்களை போட்டித் தன்மை வாய்ந்ததாக மாற்றுவதில் கவனம் செலுத்துங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியாவின் வேளாண் பொருட்களை ஏற்றுமதி சார்ந்ததாகவும், உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கிறார். பட்ஜெட்டுக்கு பின் நடந்த விவசாயம் மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது,” உலகளாவிய தரம் மற்றும் பிராண்டிங் தரநிலைகளை பூர்த்தி செய்வதற்கு தொழில்துறை மற்றும் விவசாயிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியமாகும்.

உள்ளூர் விவசாயிகளை உலகளாவிய சந்தைகளுடன் இணைப்பதற்கு தெளிவான இலக்குகளை நிர்ணயிப்பது முக்கியமாகும். இன்று உலக சந்தைகள் திறக்கப்படுகின்றன. உலகளாவிய தேவை மாறி வருகின்றது. நமது விவசாயத்தை ஏற்றுமதி சார்ந்ததாக மாற்றுவது குறித்து அதிக விவாதம் நடத்த வேண்டியது அவசியமாகும். நம்மிடம் ஒரு மாறுபட்ட காலநிலை உள்ளது. அதனை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வேளாண் பொருட்களை ஏற்றுமதி சார்ந்ததாகவும், உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றுவதில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் கிராமப்புற வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும். ரசாயனமற்ற மற்றும் இயற்கை விவசாயத்துக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலகம் முழுவதும் சந்தைகளை அடைவதற்கு இயற்கை விவசாயம் ஒரு நெடியபாதையை உருவாக்குகின்றது” என்றார்.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,
× RELATED இந்தியாவுடன் கடற்பயிற்சியில் ஈடுபட்ட...