×

அமெரிக்காவுக்கு ஈரான் கப்பல் குறித்து தகவல் வழங்கவில்லை: இந்திய கடற்படை மறுப்பு

புதுடெல்லி: அமெரிக்க ராணுவ கப்பலால் தாக்கப்பட்ட ஈரான் போர்க்கப்பல் குறித்து இந்திய கடற்படை உளவுத்துறை வழங்கியதாக கூறுவது அபத்தமானது என்று இந்தியா மறுத்துள்ளது. இந்தியா சார்பில் நடத்தப்பட்ட மிலன் சர்வதேச கடற்படை பயிற்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போர்க்கப்பல்கள் பங்கேற்றன. இந்த பயிற்சியில் பங்கேற்ற ஈரானின் ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் நாடு திரும்பிக்கொண்டு இருந்தது.

இந்நிலையில் இந்த கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 87 ஈரான் மாலுமிகள் உயிரிழந்தனர். ஈரான் போர்க்கப்பல் குறித்து இந்திய கடற்படை அமெரிக்காவிற்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக கூற்றுக்கள் எழுந்துள்ளன. இதனை இந்திய கடற்படை மறுத்துள்ளது. இது ஆதாரமற்றது மற்றும் அபத்தாமானது என்று இந்திய கடற்படையின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : Indian Navy ,US ,New Delhi ,India ,Milan ,
× RELATED நேபாளத்தின் பிரதமராகும் ‘ராப்’ பாடகர் பாலேந்திர ஷா!