×

அசாமில் பயிற்சியின் போது மாயமான சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது: 2 விமானப்படை வீரர்கள் பலி

ஜோர்காட்: அசாமில் பயிற்சியின் போது மாயமான சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான நிலையில் அதில் இருந்த இரண்டு இந்திய விமானப்படை வீரர்கள் பலியாகி உள்ளனர். அசாம் மாநிலம் ஜோர்காட் விமானப்படை தளத்திலிருந்து சுகோய் சு-30எம்கேஐ ரக போர் விமானம் நேற்று முன்தினம் மாலை வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவதற்காக புறப்பட்டுச் சென்றது.

இரவு 7.42 மணி அளவில் தரைக்கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அந்த விமானம் இழந்தது. இதனைத் தொடர்ந்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் ஜோர்காட்டில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள கர்பி ஆங்லாங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது நள்ளிரவு உறுதி செய்யப்பட்டது. அடர்ந்த காடு மற்றும் மலைப்பாங்கான பகுதி என்பதால் மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்தை அடைவதில் பெரும் சவால்களை சந்திக்க நேரிட்டது.

இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படையின் எக்ஸ் தள பதிவில், ‘பயிற்சி பணியில் இருந்த சுகோய் விமானம் கர்பி ஆங்லாங் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 2 விமானிகள் அனுஜ் மற்றும் லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர நேரத்தில் இந்திய விமானப்படை சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Assam ,Jorhat ,Indian Air Force ,Sukhoi ,Jorhat air force ,Assam… ,
× RELATED இந்தியாவுடன் கடற்பயிற்சியில் ஈடுபட்ட...