சென்னை: இந்தியாவை அமெரிக்காவின் அடிமை நாடாக பிரதமர் நரேந்திர மோடி மாற்றிவிட்டார் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். எந்த நாட்டிடம் எத்தனை பேரல் கச்சா எண்ணெய் இந்தியா வாங்க வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிடுகிறார். அமெரிக்காவுக்கு அடிமையாக இருப்பது பாஜகவினருக்கு பெருமையாக இருக்கலாம்; ஆனால் இந்தியர்களுக்கு அவமானம் என தெரிவித்தார்.
