நீலகிரி : கோடநாடு கொலை கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்? என்று சிபிசிஐடியிடம் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். நீலகிரி மாவட்ட புதிய நீதிபதி முரளிதரன் சிபிசிஐடி போலிசாரிடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையார் மனோஜ் மட்டுமே ஆஜரானார்.
