திருவொற்றியூரில் ரூ.9.8 கோடியில் நவீன மார்க்கெட்: விரைவில் திறக்க ஏற்பாடு

 

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மார்க்கெட் லைன் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் மீன், இறைச்சி, காய்கறிகள், பழம் மற்றும் மளிகை பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கே.பி.சங்கர் எம்எல்ஏ சட்டமன்ற கூட்டத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, முன்னிலையில் கவுன்சிலர் உமாசரவணன் இதற்கான தீர்மானத்தை முன் வைத்தார்.

இதை ஏற்று, சென்னை மாநகராட்சி மூலதன நிதி ரூ.9.8 கோடியில் 27.879 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மார்க்கெட் அமைக்க கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி கட்டுமான பணி தொடங்கப்பட்டது.இதில், 300 கடைகள், நவீன கழிவறை, கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் நவீன முறையில் மார்க்கெட் கட்டமைக்கும் பணி நடைபெற்று உள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 5 ம் தேதி துவக்கப்பட்ட மார்க்கெட் கட்டுமான பணி முடிப்பதற்கான கால அவகாசம் 2 ஆண்டுகள் இருக்கக்கூடிய நிலையில் அதிகாரிகள் தீவிர முயற்சியின் காரணமாக 9 மாதத்திற்குள் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது, வியாபாரிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மார்க்கெட் கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

Related Stories: