சென்னை : இந்தி திணிப்பு குறித்த தமிழிசை சௌந்தரராஜனின் பதிவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., பதிலடி கொடுத்துள்ளார். அதில், “இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள். இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்கு பதட்டம் கூடுகிறது.வந்தே பாரத், தேஜஸ், அந்த்யோதயா, நமோ பாரத், அம்ரித் பாரத், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், பிரதான் மந்திரி பாரதிய ஜனசௌஷதி கேந்திரா என அனைத்து பெயர்களையும் இந்தியில் மட்டுமே சூட்டியது தான் பாஜக ஆட்சி,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
