விருதுநகர், மார்ச் 2: ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் வெண்மணி போராளி அமல்ராஜ் நினைவுநாள் பொது கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு அமல்ராஜ் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:
வடமாநிலங்களில் நக்சல்பாரி இயக்கத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் வனப்பகுதியில் அமித்ஷா கொத்து கொத்தாக குண்டுகளை வீசுகிறார். அவர்கள் அனைவரும் பழங்குடி மக்களுக்காக கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து கனிம வளங்களை பாதுகாப்பதற்காக போராடும் போராளிகள். ஒரு நக்சல்பாரி இருக்கக்கூடாது என்பதே அமித்ஷாவின் செயல்திட்டம் ஆகும். ஆளும் அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் துணிச்சலை ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஊக்கப்படுத்தியவர்கள் இடதுசாரி கட்சியினர். இவ்வாறு பேசினார்.
