ஆலந்தூரில் 3 புதிய மாநகர பேருந்து சேவை: அமைச்சர் அன்பரசன் தொடக்கி வைத்தார்

ஆலந்தூர், மார்ச் 2: ஆலந்தூரில் 3 புதிய மாநகர பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆலந்தூரில் இருந்து 3 புதிய மாநகர பேருந்துகளை இயக்கி வைக்கும் விழா கிண்டி கத்திப்பாரா பேருந்து நிறுத்தம் அருகே நேற்று நடந்தது. இந்த விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கொடியசைத்து பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்துகளில் ஒரு பேருந்து புழுதிவாக்கத்தில் இருந்து புறப்பட்டு ஆதம்பாக்கம் பாலாஜி நகர், சைதாப்பேட்டை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையும். அதேபோல் கோவூர் இபி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு மீனம்பாக்கம் வரை செல்லும். இந்த பேருந்துகள் பெரியபணிச்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக மீனம்பாக்கம் வந்தடையும். இந்தப் பேருந்துகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சியில் ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பா.குணாளன், கவுன்சிலர் பிருந்தா  முரளி கிருஷ்ணன், சாய் ஜெயகாந்த் நடராஜன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், டி.ரவி, மாநகரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: