ஐதராபாத் மாநகராட்சியில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அரசு ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.2 லட்சமாக அதிகரிப்பு..!!

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அரசு ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.2 லட்சமாக அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து ஊதியம் உயர்த்தப்பட்டதால் அரசு, உள்ளாட்சி, பொதுத்துறை ஊழியர்கள் ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஐதராபாத் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களின் சராசரி மாத ஊதியம் ரூ.70,000 வரை உயர்ந்துள்ளது. மாநகராட்சிகளில் அலுவலக உதவியாளராக பணியில் சேருபவர்கள் மாதம் ரூ.35,000 வரை ஊதியம் பெறுகின்றனர்.

Related Stories: