நீதித்துறையில் ஊழல் என்ற கட்டுரை மூலம் நீதித்துறை மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்; ரத்தம் கொட்டுகிறது : உச்சநீதிமன்றம்

டெல்லி : நீதித்துறையில் ஊழல் என்ற கட்டுரை மூலம் நீதித்துறை மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்; ரத்தம் கொட்டுகிறது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 8ம் வகுப்பு புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் இடம்பெற்றது குறித்து நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது ஒன்றிய அரசு. ஆனால் ஒன்றிய அரசின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், நீதித்துறை குறித்த என்.சி.இ.ஆர்.டி.யின் சர்ச்சை கருத்து திட்டமிட்ட செயல் என கண்டனம் தெரிவித்தது. மேலும் பாடத்தை யார் சேர்த்ததற்கு யார் பொறுப்பு என்பது தெரியாமல் இந்த வழக்கை முடிக்கமாட்டோம் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார். NCERT இயக்குனர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், பாட புத்தகத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

Related Stories: