உதய்ப்பூர்: நடிகை ராஷ்மிகா, நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் உதய்ப்பூரில் இன்று காலை 2 சடங்குகள் முறைப்படி இருமுறை நடந்தது. ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா, தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படத்தில் இணைந்து நடித்தபோது டேட்டிங் செய்தனர். அதன் பிறகு இவர்கள் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக மீண்டும் நண்பர்களாக மாறிய இவர்கள், தீவிர காதலில் ஈடுபட்டனர்.
இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களது நிச்சயதார்த்தம் ரகசியமாக ஐதராபாத்தில் நடைபெற்றது. பிப்ரவரி 26ம் தேதி உதய்ப்பூரில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அதிகாலையில் கொடவா முறைப்படி ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திருமணம் நடந்தது. கர்நாடகத்தை சேர்ந்த ராஷ்மிகா, கொடவா இனத்தை சேர்ந்தவர். விஜய் தேவரகொண்டா, தெலங்கானாவை சேர்ந்தவர்.
இதனால் காலை 10.10 மணியளவில் இவர்களின் திருமணம் மீண்டும் தெலுங்கு இந்து முறைப்படி நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். திருமணத்தை முன்னிட்டு ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
