ராஞ்சியில் 7 பேர் உயிரிழந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் கருப்பு பெட்டி இல்லாமல் இருந்தது கண்டுபிடிப்பு

ராஞ்சி : ஜார்க்கண்ட்மாநிலம் ராஞ்சியில் 7 பேர் உயிரிழந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் கருப்பு பெட்டி இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கருப்பு பெட்டி இல்லாமல் விமானம் இயக்கப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது. விபத்துக்குள்ளான பீச்க்ராப்ட் C90A விமானத்தில் அதன் செயல்பாட்டை பதிவு செய்யும் கருவி இல்லை. கட்டுப்பாட்டு மையத்துடன் விமானிகள் நடத்தும் உரையாடலை பதிவு செய்யும் வாய்ஸ் ரெக்கார்டரும் இல்லாதது அம்பலம் ஆகியுள்ளது.

Related Stories: