மாசி மக திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 2ம் தேதி தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 

தஞ்சாவூர்: மாசி மக திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 2ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு அளித்துள்ளார். இதனை ஈடு செய்ய 14ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் கும்பமேளா என்றழைக்கப்படும் மகாமகம், மாசி மகத் திருவிழா மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் மகம் நட்சத்திரம் குரு சிம்மராசியில் இருக்கும் போது வரும் நாள் மகாமகம் அல்லது மாசிமகம் என்றழைக்கப்படுகிறது.

இந்த மாசிமகத் திருவிழா உலகில் வாழும் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பெரு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

வருடாவருடம் நடக்கும் மகாமகத் திருவிழாவில் கும்பகோணத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அதுவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாசிமகத் திருவிழாவில் ஏறக்குறைய 20 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடுகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு மாசி மகம் விழா மாசி 18 மார்ச் 02.2026 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 02ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். இருப்பினும், இந்த விடுமுறை வங்கிகளுக்குப் பொருந்தாது. மேலும், அத்தியாவசியச் சேவைகள் வழக்கம் போல் செயல்படும். இதனை ஈடு செய்ய 14ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: