வாரணாசி: உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகள் ஆட்சி செய்கிறார்கள், குற்றச்சாட்டுகளை முன்வைத்து விசாரணைகளில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்று ேஜாதீஷ்பீட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி குற்றம் சாட்டினார். ஜோதீஷ்பீட சங்கராச்சரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி மீது உபியில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் தன்மீதான குற்றச்சாட்டு குறித்து சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கூறுகையில்,’ எனது தொலைபேசியில் உள்ளதாக கூறப்படும் வாட்ஸ்அப் குழுவை அசுதோஷ் பாண்டே என்ற நபர் உருவாக்கி உள்ளார். போலீசார் எந்த விசாரணையை நடத்தினாலும் அசுதோஷ் பாண்டேவைச் சென்றடைகிறது. இது என்ன மாதிரியான விசாரணை? இதனால் நாடு முழுவதும் உள்ள துறவிகள் அச்சமடைந்துள்ளனர். நாட்டில் உள்ள சாதுக்களும் துறவிகளும் கவலைப்படுகிறார்கள். ஒரு குற்றவாளி, ஒரு சங்கராச்சாரியார் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினால், அவர்களுக்கு என்ன நடக்கும்? பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏதாவது தவறு நடந்திருந்தால், அது அவர்களுடன் இருந்தவர்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எங்களுக்கு அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை,. யாராவது ஒரு கதையை புனைய விரும்பினால், அவர்கள் எதையும் புனைய முடியும். உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகள் ஆட்சி செய்கிறார்கள், குற்றச்சாட்டுகளை முன்வைத்து விசாரணைகளில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஆனால் மூன்று நீதிமன்றங்கள் உள்ளன. முதலாவது பொதுமக்கள், அவர்கள் அனைத்தையும் கண்காணித்து தீர்ப்பு வழங்குவார்கள். இரண்டாவது அவரது சொந்த மனசாட்சி; மூன்றாவது உச்ச நீதிமன்றம், யார் சரி, யார் தவறு என்பதை முடியும். இந்த மூவரிடமிருந்தும் எனக்கு சுத்தமான நற்சான்றிதழ் கிடைத்துள்ளது’ என்றார்.
