அமெரிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய சொன்னால் அமைதியாக இஸ்ரேலுக்கு சென்று விட்டார் மோடி: ராகுல்காந்தி விமர்சனம்

புதுடெல்லி: அமெரிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய சொன்னால் அமைதியாக பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்று விட்டதாக ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில்,’ நரேந்திரா சரண்டர் மோடிக்கு, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய நான் சவால் விடுத்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. மீண்டும் ஒருமுறை, நீங்கள் அமைதியாக இஸ்ரேலுக்கு நழுவிச்சென்று விட்டீர்கள். எப்ஸ்டீனின் கட்டளைப்படி நீங்கள் ஏற்கனவே ஒரு முறை இஸ்ரேலில் . நடனமாடி பாடியுள்ளீர்கள். எனவே இந்த முறை, யாருடைய உத்தரவின் பேரில் நீங்கள் நாட்டின் நலன்களுக்கு எதிராக ஒரு ஒப்பந்தத்தை செய்துவிட்டு திரும்புவீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: