செல்லப்பிராணிகளின் உமிழ்நீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

இங்கிலாந்து: செல்லப்பிராணிகளிடம் நாம் காட்டும் அன்பும் அவை நாம்மிடம் காட்டும் பாசமும் சில நேரங்களில் மிக அரிதான மருத்துவ சிக்கல்களுக்கு காரணமாக கூடும் என்பதை இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான மன்ஜீத் சங்காவிற்கு நேர்ந்த சம்பவம் உணர்த்துகிறது. ஒரு சிறிய கிரலை வளர்ப்பு நாய் நக்கியதால் ஏற்ப்பட்ட பாதிப்பு இன்று அவரை 4 உறுப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 56 வயதான மன்ஜீத் சங்கா தனது நாயுடன் விளையாடி கொண்டிருந்த போது அவரது கையில் கத்தியால் ஏற்பட்டிருந்த ஒரு சிறிய வெட்டு காயத்தை நாய் நக்கியுள்ளது.

அந்த சிறிய காயத்தை பற்றி அவர் பெரிதாக கருதவில்லை. ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் உடல்நிலை மோசமடைய தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் சுயநினைவை இழந்த நிலையில், அவரது கை மற்றும் கால்கள் பனிக்கட்டியை போல குளிர்ந்தும் உதடுகள் ஊதா நிறமாக மாறின. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட அவருக்கு Sepsis எனப்படும் மிக தீவிரமான ரத்த தோற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். நாய்களின் உமிழ்நீரில் பொதுவாக காணப்படும் கேப்னோசைட்டோபாகா கேனிமோர்சஸ் என்ற பாக்டீரியா மன்ஜீத்தின் உடலிலிருந்து சிறிய காயம் வழியாக ரத்தத்தில் கலந்ததே இந்த நிலைக்கு காரணமாக அமைந்தது.

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட 32 வாரங்களில் மன்ஜீத்தின் இதயம் 6 முறை துடிப்பதை நிறுத்தியது. தோற்று உடல் முழுவதும் பரவியதால் அவரது உயிரை காக்க மருத்துவர்கள் வேறுவழியின்றி முழங்காலுக்கு கீழே இரண்டு கால்களையும், இரண்டு கைகளையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இது தவிர அவரது மண்ணீரலும் அகற்றப்பட்டது. மேலும் அவர் நிமோனியா மற்றும் பித்தப்பை கற்கள் போன்ற உபாதைகளையும் எதிர்கொண்டார். மருத்துவ ரீதியாக Sepsis என்பது ஒரு தோற்றுக்கு எதிராக நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் காட்டும் மிக மோசமான எதிர்வினையாகும்.

நமது உடல் கிருமிகளுடன் போராடுவதற்கு பதிலாக தவறுதலாக தனது சொந்த ஆரோக்கியமான திசுக்களையும் உறுப்புகளையும் தாக்க தொடங்குவதே இந்நிலை. ஆனால் உடல்முழுவதும் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் அழுத்தம் குறைந்தும் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கும். இதனை செப்டிக் ஷாக் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றன. தற்போது பல மாத போராட்டத்திற்கு பிறகு மன்ஜீத் வீடு திரும்பியுள்ளார். இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் எதையும் சாதாரணமாக நினைக்காதீர்கள் என்று அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இழந்த தனது உறுப்புகளுக்கு பதிலாக நவீன ரோபோட்டிக் செயற்கை உறுப்புகளை பொறுத்த அவர் தற்போது நிதி திரட்டி வருகிறார். செல்லப்பிராணிகளிடம் பழகும் போது உடலில் சிறு காயங்கள் இருந்தால் அவற்றை முறையாக சுத்தபடுத்தி முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

Related Stories: