மாஸ்கோவில் மனித வெடிகுண்டு தாக்குதல்: போலீஸ் அதிகாரி பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் ரோந்து வாகனத்திற்கு அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவின் மாஸ்கோவில் சவ்யோலேவ்ஸ்கி ரயில் நிலையம் அருகே நள்ளிரவு போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் போக்குவரத்து போலீஸ் வாகனத்தின் அருகே சென்று வெடிகுண்டை வெடிக்க செய்தார். இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய நபரும் இதில் உயிரிழந்த நிலையில் அவர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார் உள்ளிட்ட எந்த விவரங்களையும் புலனாய்வுக் குழு தெரிவிக்கவில்லை. இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. உக்ரைனுக்கு வீரர்களை அனுப்புவதற்காக ரஷ்ய அதிபர் புதின் முடிவெடுத்ததன் நான்காவது ஆண்டு நிறைவை குறிக்கும் நாளில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: