முதலமைச்சர் பங்கேற்கும் விழா: குமரியில் 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை

நாகர்கோவில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 24, 25 தேதிகளில் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் முதலமைச்சர் தங்கியிருக்கும் மற்றும் பயணம் செய்யும் நேரங்களில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் பொருட்டு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் குமரி மாவட்டத்திற்கு மேற்கொள்ளும் அரசு முறை பயணத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதில் வெளி மாவட்டங்களிலிருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு முக்கிய சந்திப்புகளில் நிறுத்தப்படுகின்றனர். முதலமைச்சர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை, விழா நடைபெறும் இடங்கள் மற்றும் அவர் செல்லும் வழிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. வெடிகுண்டு கண்டறியும் மற்றும் அகற்றும் நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் விழா மேடைகள், பொது இடங்களில் அவ்வப்போது தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக குமரி மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தங்கியிருக்கும் மற்றும் பயணம் செய்யும் நேரங்களில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்தத் தடை அமல்படுத்தப்படுகிறது. பொதுவாக இத்தகைய பயணங்களின் போது 2 நாட்களுக்கு இந்தத் தடை நீடிக்கும்.

நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானம் (நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடம்), கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் வளைவு மற்றும் புத்தளம் (தொடக்க விழா நடைபெறும் இடங்கள்). முதலமைச்சர் பயணிக்கும் சாலை வழித்தடங்கள் மற்றும் அவர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை சுற்றியுள்ள பகுதிகள் போன்ற இடங்களில் இந்த தடை அமலில் இருக்கும். ஆட்சியரின் இந்தத் தடையை மீறி ட்ரோன்களைப் பறக்கவிடும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தமிழ்நாடு காவல் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் வருகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விழா நடைபெறும் நாகர்கோவில் கன்கார்டியா மைதானம் மற்றும் கன்னியாகுமரி முக்கிய பகுதிகளில் தற்காலிகமாக கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. முதலமைச்சர் செல்லும் நேரங்களில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி நகரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தனியே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் கன்கார்டியா மைதானத்தில் பொதுமக்களுக்கான தனி வரிசைகள், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கான தனி வழிகள் அமைக்கப்பட்டு தடுப்புக் கட்டைகள் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் பாதுகாப்பு வாகன வரிசையில் அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். விழா நடைபெறும் அனைத்து இடங்களிலும் தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். முதலமைச்சர் விழா நடைபெறும் இடங்கள் முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுகிறது.

Related Stories: