×

மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும் : அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை

சென்னை : தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். அதில்,

*அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள், சோதனைகள் வந்தன. இந்த ஆட்சி பதவியேற்ற உடன் முறையாக பயிற்சி பெற்ற 23 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.

*மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.சமூக நீதிக்காக நமது திராவிட மாடல் அரசு என்றென்றும் தொடர்ந்து போராடும்.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பேருந்து தான். பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும் வகையில் விடியல் பயணம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

*கடைக்கோடி மக்களின் நலன் காக்கும் ஆட்சியாக உள்ளது திராவிட மாடல் ஆட்சி.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகிறது.

*நமது முதலமைச்சர் ஆட்சியில் மகளிர் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கே நல்வழி காட்டும் நல்லாட்சி.

*மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் அளிப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகம் ஆக உள்ளது.

*பள்ளி குழந்தைகள் பசியின்றி பயில அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்தான் காலை உணவுத் திட்டம். பெற்றோர் இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்க அன்புக்கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

*பெயர் என்பது ஒரு சமூகத்தின் ஆணிவேர். பெயர்களை சூட்டுவதிலும் பெயரை மாற்றுவதிலும் தமிழ்நாடு அரசு உயர்ந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறது.

*உலகத்தில் உள்ள தமிழர்களும் பயன்பெறும் வகையில் அயலக தமிழர் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

*நாடே வியக்கும் வண்ணம் கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை முதலமைச்சர் வடிவமைத்துள்ளார். தமிழ் பண்பாட்டின் காவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது என்றும் வரலாற்றில் மறக்கப்படாது. நமது தாய்மொழி நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர் அண்ணா.

*வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் திமுக அரசின் இலக்கு.

*5 ஆண்டுகளில் ஜாதி, மத மோதல்கள் எதுவும் இல்லாமல் தமிழ்நாடு அமைதியாக உள்ளது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது. மெட்ரோ ரயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்துக்கு நிதி தருவதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

*நாட்டிற்கே நல்வழி காட்டும் நல்லாட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து பொருளாதாரத்தை மீட்டெடுத்தது திராவிட மாடல் ஆட்சி. இயற்கை பேரிடர்கள் மட்டுமல்லாமல், ஒன்றிய அரசு உருவாக்கும் செயற்கை நிதி நெருக்கடிகளையும் திமுக அரசு சமாளித்துள்ளது.

*மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். கொந்தளிப்பு உணர்வு இருக்கும்வரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்.

*சமூக நீதிக்கு பங்கம் வரும்போது எல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும். வளர்ந்த நாடுகளுடன் தான் தமிழ்நாடு போட்டியிடுகிறது; மற்ற மாநிலங்களோடு அல்ல. தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன்தான் நாம் போட்டி போடுகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Minister ,Thangam Thenrarasu ,Chennai ,Finance Minister ,Thangam Tennarasu ,Government of Tamil Nadu ,
× RELATED வங்கதேச வான்வெளியில் ஸ்பைஸ் ஜெட்...