1,250 சத்துணவு மையம் பணிகள் நிறைவு: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை(காங்கிரஸ்) பேசுகையில், தமிழ்நாட்டில் எத்தனை சத்துணவு கூடங்கள் ஊராட்சியில் இருக்கின்றன. குக்கிராமங்கள், சிறு ஊர்களில் எவ்வளவு சத்துணவு கூடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இன்னும் கட்டாமல் ஏதாவது இருக்கின்றதா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசுகையில், தமிழ்நாட்டில் மொத்தம் 43 ஆயிரத்து 8 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சுமார் 30 ஆயிரம் வைப்பறைகள், வைப்பறையுடன்கூடிய சமையலறை, அதாவது ஸ்டோர் ரூம், சமையலறை சேர்த்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆட்சி அமைந்தபிறகு 2,100 புதியதாக வைப்பறைகள் கட்டுவதற்கு உத்தரவிடப்பட்டு அதில், கிட்டத்தட்ட 1,250 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. மீதம் உள்ள பணிகள் எல்லாம் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வெகு விரைவிலே அந்தப் பணிகள் முடிவுறும் என்றார்.

Related Stories: