பாஜவின் டபுள் இன்ஜின் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தாது: ஈ.ஆர்.ஈஸ்வரன் பேச்சு

சென்னை: பேரவையில் நேற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியதாவது: ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வருமானம் ஈட்ட வேண்டும் என்று முதல்வர் பல்வேறு திட்டங்களைத் தீட்டிக்கொண்டு இருக்கிறார்; இதுதான் டபுள் இன்ஜின். இதுதான் நம்மை வளர்த்த இன்ஜின். ஆனால் அவர்கள் சொல்லும் டபுள் இன்ஜின் உத்தரபிரதேசத்தில் சாலை போடலாம், கட்டிடங்களைக் கட்டலாம்; ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை அந்த டபுள் இன்ஜின் மேம்படுத்தாது. வடமாநிலங்களின் வாழ்க்கைத்தரம் 1980ல் உள்ளது, நாம் 2030ல் உள்ளோம். அவர்கள் 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளார்கள். தனியார் பள்ளிகளைப் போல ஆசிரியர்கள் பெற்றோர் சந்திப்பு அடிக்கடி அரசுப்பள்ளிகளில் நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் தனிமனித ஒழுக்கம் மேம்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: