விஐடி பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: தாய்லாந்து பல்கலைக்கழகம் வழங்கியது

சென்னை: வேலூர் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு, தாய்லாந்தின் பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் க்ருங்தெப் (RMUTK) “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியுள்ளது. தாய்லாந்து நாட்டின் பிரிவி கவுன்சில் ஆலோசனை குழு உறுப்பினரான பலகோர்ன் சுவன்ரத் மற்றும் ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் பிச்சை ஜன்மனி ஆகியோர் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தை வழங்கி சிறப்பித்தனர். இந்த உயரிய விருது விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனின் பொறியியல் கல்வித்துறையில் சிறப்பான பங்களிப்பு மற்றும் தலைமைத்துவம் மற்றும் உயர்கல்வியில் தொழில்நுட்ப மேலாண்மை முன்னேற்றம் ஆகியவற்றை பாராட்டி “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், டாக்டர் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: